Friday, December 11, 2009

பைபிளை அறிவியல் பொய்யாக்கிவிட்டதா?

பைபிளை அறிவியல் பொய்யாக்கிவிட்டதா?



அன்பானவர்களே
இன்று நாம் அறிவியல் யுகம் வளர்ச்சியடைந்த நாட்களில் இருக்கிறோம், இந்தக் காலகட்டத்தில் நாம் பூமி தேவனால் உண்டாக்கப்பட்டது என்று சொல்வதையும், பைபிளில் மனிதன் உருவாக்கப்பட்ட விதத்தையும், அதே போல குரங்கிலிருந்து மனிதன் தோண்றினான் என்று பரினாமக் கொள்கை பெருவாரியாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில், பைபிள் சொல்வதை நம்மால் மட்டும் எப்படி நம்ப முடியும்? என்ற கேள்வி மிக மிகச் சாதாரணமானதுதான் இல்லையா?

அதே போல இந்த உலகம் படைக்கப்பட்டு ஆராயிரம்(6000) ஆண்டுகள் மட்டுமே ஆகிறது என்று பைபிள் சொல்லும் போது பல இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு புதைப்பட்ட டைனோசர்கள் போன்றவற்றின் படிமங்கள், கல்மரம், போன்ற பல தொன்மையான பொருடகள் சொல்லும் உண்மை என்ன? இந்த கேள்விகள் பைபிள் பொய் என்று தெளிவாகச் சொல்லப்பட்டு விட்டது என்று சந்தேகம் தோண்றுவதும் இயல்புதானே????

இப்படி நவீன அறிவியல் யுகம், ஒரு வரலாற்றுப் பெட்டகம் என நிரூபிக்கப்பட்ட பைபிளை எப்படி பழம் கட்டுக்கதை என்று சொல்வது முற்றிலும் தவறு என்று வேத அடிப்படையில் நான் சொன்னால் நீங்கள் இதை நம்பத் தயாரா?

இன்னும் கூட இன்று அறிவியல் கண்டுபிடித்த பல உண்மைகளை பைபிள் பல ஆயிரக்கனக்கான ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது என்று சொன்னால் நீங்கள் நம்பத்தயாரா?

இவை எல்லாவற்றிற்கும் மேலாக முற்றிலும் புதிய செய்தி ஒன்று சொல்லுகிறேன் இதை நீங்கள் கஷ்டப்பட்டு நம்பிதான் ஆகவேண்டும் அது என்ன? அறிவியலும் பைபிளும் ஒரு ஒரே நேர்கோட்டில் தான் செல்கிறது.
இன்னும் சொல்லப்போனால் அறிவியல் வருங்காலத்தில் கண்டுபிடிக்கப்போகும் சில கண்டுபிடிப்புகளையும் வேதம் மிக மிக அழகாக சொல்லியிருக்கிறது என்றும் சொன்னால் இவன் ஏதோ உளருகிறான் என்று சொல்லிவிடாதீர்கள்

வேதாகம வசன ஆதாரத்துடன் இவற்றை தெளிவாகச் சொல்ல நான் தயார் படிக்கத் தயாராகுங்கள், புதிய பரிமானத்தில் வேதத்தை நீங்கள் பார்ப்பீர்கள் என்பதும் என்னால் உறுதியாக கிறிஸ்துவுக்குள் சொல்ல முடியும், காத்திருங்கள்..........

No comments:

free web counter