Monday, November 12, 2007

பிறவா முதல்வன் யார்?

தென்னாட்டுக்கு ஒரு சிவன் வட நாட்டுக்கு ஒரு சிவன் உலகில் உள்ள மற்ற எல்லாருக்கும் ஒரு சிவன் என்பது போல் ஒரு மாயையான தோற்றத்தை எற்படுத்தி உள்ளது நமது புராணங்கள்.

ஆனால் உண்மை என்ன சிவம் என்றால் அன்பு. அன்பே உருவான தெய்வம் சிவம் என்று அழைக்க பட்டால் அது தவறல்ல.

தமிழ் பாடல் ஒன்று உள்ளது

இறவா இன்பத்துள் எனை இருத்தல் வேண்டி

பிறவா முதல்வன் பிறந்தான்

போற்றிப்பற்றொடை

இதில் அன்பே உருவான தெய்வம் பிறக்க வேண்டிய அவசியம் இல்லாதவன் மனிதனாக பிறந்தது எதற்காக என்றால் நம்மை நீடிய வாழ்வுக்குள் அழைத்து செல்ல அவன் பிறந்தான் என்று சொல்கிறது.

இதையே இன்னொரு தமிழ் பாடல் சொல்கிறது

"அருபரத்தொருவன் அவனியில் வந்து

குருபரனாகி அருளிய பெருமை

சிறுமையென்றிகழாதே"

அதாவது உருவம் இல்லாத இறைவன் போதகனாக உலகில் அவதரித்து நமக்காக அருளிய நன்மைகளை கேவலமாக எண்ண வேண்டாம்.

அன்பு நெஞ்சங்களே நீங்கள் அப்படி செய்கிறீர்களா?

நமக்கு நீடிய வாழ்வுதர இறைவன் உலகில் மனிதனாக வந்தார்.அவர் இரத்தம் சிந்தி தீமையகிய சாத்தானை காலின் கீழ் மிதித்து போட்டார்.இதற்காக இறைவன் கபாலஸ்தலம் என்னும் இடத்தில் ஆனந்த கூத்தாடினார்.

இந்த தியாகத்தை கேவலமாக எண்ண முடியுமா.

இதனையே தயுமானவர் சுவாமிகள் இப்படிப்பாடினார்கள்

"தன்னைத் தந்து என்னைத் தடுத்தாட் கொண்ட நின் கருணைக்குஎன்னைத் தந்து என்ன பயன் -எந்தாய் பராபரமே"-தாயுமானவர் (கிபி 1706 - 1744)

நாம் சிந்திப்போமா?

Monday, October 1, 2007

tamil god

தென்னாட்டுடைய சிவனே போற்றி

என் நாட்டவருக்கும் இறைவா போற்றி

free web counter