Monday, January 28, 2008

பாவத்திலிருந்து விடுதலை

வேதபகுதி: 1யோவான்


தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், எனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். "
1யோவான் 3:9



ஒரு மனிதர் தன்னுடைய வீட்டை விற்க விரும்பினார். ஆனால் அந்த வீட்டின் ஒரு மூலையில் உள்ள ஒரே ஒரு அறை மட்டும் தனக்குச் சொந்தமாக இருக்கும் என்று கூறினார். இந்த வீட்டை வாங்குவதற்கு ஒருவரும் முன்வரவில்லை. கடைசியில் ஒரே ஒருவர் அந்த வீட்டைக் குறைந்த விலைக்கு வாங்க முன் வந்தார்.வீட்டை வாங்கியக் குடும்பத்தினர் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். இந்த நிலையில் வீட்டை விற்ற அந்த நபர் ஒரு சில ஆண்டுகள் கழித்து தான் விற்ற வீட்டைப் பார்ப்பதற்காக வந்தார். பின்னர் வீட்டை வாங்கிய நபரிடம் தான் மீண்டும் இந்த வீட்டை வாங்குவதாகவும் வீட்டை தங்களுக்கு விற்று விடும் படிக் கேட்டார். அதற்கு வீட்டை வாங்கிய நபர் தான் விற்க விரும்பவில்லை என்று கூறினார். வீட்டை விற்ற நபர் சென்று விட்டார். ஒரு சில நாட்கள் கழித்து விட்டை விற்ற நபர் தனக்குச் சொந்தமான அந்த அறையில் ஒரு செத்த நாயைக் கொண்டு வந்துத் தொங்க விட்டுச் சென்றார். வீட்டை வாங்கிய நபரால் அந்த வீட்டில் இருக்க மூடியாமல் வெளியேற வேண்டியதாகி விட்டது.



ஆம் பிரியமானவர்களெ, இப்படித்தான் நாமும் நம்மை முழுமையாக ஆண்டவரிடம் ஒப்புக்கொடுக்காமல், ஏதாவது ஒரு சிலத் தவறுகளைச் செய்துக் கொண்டிருக்கிறோம். ஒருகட்டத்தில் பாவம் நம்மை ஆட்கொண்டு நாம் முழுவதுமாகச் சாத்தானின் பிள்ளைகளாகி விடுகின்றோம். மேலே கூறிய சம்பவத்தில் வீட்டை வாங்கிய நபர் ஓரத்தில் உள்ள ஒரே ஒரு சிறிய அறை தானே அதனால் நமக்கு என்ன நஷ்டம் வரப்போகிறது விலை குறைவாக விடூ கிடைக்கிறதே என்ற எண்ணத்தில் வீட்டை வாங்கி விட்டார். ஆனால் அவரால் நிரந்தரமாக அவரால் குடியிருக்க முடியவில்லை.




நாமும் நம்முடைய சிற்றின்பத்திற்காக ஒரு சில பாவங்களைச் செய்துக் கொண்டிருப்போமானால் "நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்@ அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது" என்று 1 யோவான் 1 :6 - 8 ல் சொல்லியிருக்கிறபடி நாம் இன்னும் இருளில் தான் இருக்கிறோம். ஒளி நம்மிடத்தில் இல்லை. நாம் நம்மைப் பூரணமாய் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கும் போது தான் அவர் நம்மை ஆசிர்வதிப்பார்.





சிந்தனை: :"நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்" 1 யோவான் 1:9


ஜெபம்: தேவனே நான் என்னை முழுவதுமாக உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீரே என்னை வழிநடத்தி பரலோக வாழ்விற்குப் பங்காளராக என்னை மாற்றும். ஆமேன்.

http://sathiyavasanam.blogspot.com/2008/01/blog-post_28.html

No comments:

free web counter